*இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?* ⁉️ _தெரிந்து கொள்வோம்‼️_ 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்! 🏵️ 9 ராஜ கோபுரங்கள், 🏵️ 80 விமானங்கள், 🏵️ 12 பெரிய மதில்கள், 🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள், 🏵️ 15 தீர்த்தக்கிணறுகள், 🏵️ 3 நந்தவனங்கள், 🏵️3 பெரிய பிரகாரங்கள், 🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 🏵️ 86 விநாயகர் சிலைகள், 🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.* தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30...