Posts

Showing posts with the label Random stories

ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார்🤣🤣

Image
ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார். RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். இரண்டாம் முறை சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். மூன்றாம் முறை சென்றார் அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை. RTO லைசென்ஸ் தர மறுத்து விட்டார். அந்தபெண்ணுக்கு இந்தத்தடவை கடுமையான கோபம் வந்து விட்டது. RTO வைப் பார்த்துக் கேட்டார், நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். நான் சொன்ன நாலு பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? அப்படி அந்த RTO என்ன தான் கேட்டார் அந்தப் பெண் என்ன பதில் சொன்னார். நீங்களே சொல்லுங்கள் நியாயம் RTO கேட்டார் : "அம்மா நீங்கள் ஹைவேயில் 125 கி மீ வேகத்தில் உங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள். திடீரென்று உங்கள் முன்னா்ல் ஒரு கிழவனும் ஒரு இளைஞனும் வேறு வேறு திசையிலிருந்து முன்னால் வந்து விட்டார்கள். வலது பக்க...

காபி க்ளப் Trichy

Image
காபி க்ளப் நூறு வருடங்களுக்கு முந்தி காபி க்ளப் இருந்ததாவென்று ஒரு சிநேகிதன் கேட்டிருந்தார் காபி க்ளப் கலாச்சாரம் நூறு வருடங்களுக்கும் முற்பட்டது. எனக்குத்தெரிந்த வகையில், வேறு வாழ்வாதாரம் இல்லாத, நன்றாக சமைக்கத்தெரிந்த ஏழை பிராமணக்குடும்பத்தினர் இதை ஒரு தொழிலாக தன் சிறிய வீட்டில் திண்ணைக்கு வெளியில் இரண்டு பெஞ்ச்களைப்போட்டு வருபவர்களுக்கு சுடச்சுட இட்லியும் தேங்காய்ச்சட்னியும் சுவையோடு கொடுத்தார்கள்.வியாபாரம் பச்சைபிடித்ததும், இன்னும் ரெண்டு பென்ச் உள்திண்ணையில்!  எனக்குத்தெரிந்து ஒரு திருவிதாங்கூர் சக்கரத்துக்கு (ரஃப்லி அரையணா) பத்து இட்லிகள். எதிர்பாராத விருந்தினர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு, ‘டேய்…நேத்திக்கு மாவரைக்கலைடா…கிச்சாவாத்துக்குப் போய் ஒரணாவுக்கு இட்லி வாங்கிண்டுவா!’ என்பதில் தொடங்கியிருக்கவேண்டும். அடுத்து மாதவிலக்கான கிராமத்துப்பெண்கள் இவரது முக்கிய கஸ்டமர்கள். மாதம் 27 நாட்கள் பூராக்குடும்பத்தின் வயிறு வாடாமல் மூன்று வேளையும் பொங்கிப்போட்ட ‘மகராசி’ அந்த 3 நாட்கள் நாதியில்லாது கொட்டிலில் முடங்கிக்கிடப்பாள். (அந்தக்காலத்தில் கிராமத்துப்பெண்களை ’அந்த ம...

மனமும் மனிதனும் "

Image
சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவருடன் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் நாகபட்டிணம் சென்றேன்.  பூதலூரில் (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார். அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம் வாசி, குடிகாரர் என்ற ரீதியில் இருந்தது. டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார். எல்லோர் பார்வையும் அவரிடம் டிக்கெட் இருக்காது என்ற ரீதியில் தோன்றியது. அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்தார் டிக்கெட்டை ..  அப்போதும் நம்பிக்கை அற்ற நிலையில் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார் என்ற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ்யா என்றார்.  அவர் இந்த வண்டிக்குத் தான்யா டிக்கெட் எடுத்திருக்கேன் எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார்.  அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது. க்ளைமாக்ஸே இனிமேல் தான்  .. அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து பையை பிரித்தார்.  அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையில் இருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார்...

இங்கிலீஷ் படம்....செக்ஸ் படம் போட்டிருக்கான்...போகலாமா..?”

Image
“ இங்கிலீஷ் படம்....செக்ஸ் படம் போட்டிருக்கான்...போகலாமா..?” “எந்த தியேட்டர்ல..?” பல்லாவரம் பக்கத்தில் , ஏதோ ஒரு தியேட்டரின் பெயரைச் சொன்னான் என் கல்லூரி் வகுப்புத் தோழன்..! கல்லூரியின் இளமைக் காலங்களில் “அந்த மாதிரி” கிளுகிளு படங்களை , நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதில் ஒரு தனி கிக் இருக்கத்தான் செய்தது..! அடுத்த செகண்டே எலெக்ட்ரிக் டிரெயினில் ஏறி ...அடுத்த ஒரு மணி நேரத்தில் தியேட்டர் வாசலில் ஆஜர் ஆனோம்.. . 11.30 ஷோ...! போஸ்டர் பார்த்தோம்... THE PREGNANCY AND CHILDBIRTH ! மருத்துவ ரீதியிலான படம் ! ஆனால் தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரிலேயே “அந்த மாதிரி” காட்சிகளைத்தான் ஏராளமாக அச்சிட்டிருந்தார்கள்...! அதற்காகத்தானே அந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள்..! கிட்டத்தட்ட ஹவுஸ்புல் ...! “எப்படா படம் போடுவான்..?” என்ற ஏக்கம் எல்லோர் கண்களிலும் ஏகத்துக்கும் இருந்தது..! ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக....! “கிர்ர்ர்ர்” என மணி அடித்தது....போட்டுட்டாம்ப்பா ...! நியூஸ் ரீல்..விளம்பரம் எதுவும் இல்லாமல் படம் ஓடத் துவங்கியது...! ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே “அந்த மாதிரி” காட்சிகள் தொ...

பம்பாயை வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!

Image
வறுமையின் காரணமாக அவளுக்கு 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க, " ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டாள். "அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்.. யாருக்கும் தெரியாமல் 10th, +2,  டிகிரி முடித்தாள். பிறகு UPSC தேர்வெழுதி IPS  அதிகாரி ஆனாள். முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் பம்பாயை  வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!